செவ்வாய், 2 ஏப்ரல், 2013

உணவுக்கு மரியாதை

உணவுக்கு மரியாதை

திருமண வீட்டில் விருந்து நடந்து கொண்டிருந்தது. கதிரவனும், அவனது அம்மாவும் சாப்பிட அமர்ந்தனர்.

அப்போது கதிரவனின் ஆசிரியர் கந்தசாமியும் விருந்திற்க்கு வந்தார்.

இதை கவனித்த கதிரவன், தன் பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில் ஆசிரியரை அமர அழைத்தான்.

ஆசிரியர் கதிரவன் பக்கத்தில் அமர்ந்தார். அவனது அம்மா, ஆசிரியருக்கு வணக்கம் செய்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.

உணவு பரிமாறப்பட்டதும் அனைவரும் சாப்பிடத் தயாரானார்கள்.

ஆசிரியர் காலணியைக் கழற்றாமல் சாப்பிடப் போவதைக் கண்ட கதிரவன், “அய்யா காலணியை கழற்றிவிட்டுச் சாப்பிடுங்க” என்றான்.

இப்படியே சாப்பிட்டால் என்ன? காலில் கிருமிகள் தொற்றாதல்லவா? என்று பதிலளித்தார் ஆசிரியர்.

“அய்யா உணவு கடவுளுக்குச் சமம் என்பார்கள். கோவிலுக்குள் போகும்போது காலணியை கழற்றி விட்டு தானே உள்ளே போகிறோம். அப்போ உணவு சாப்பிடும்போதும் காலணியை கழற்றிவிட்டு தானே சாப்பிடனும்.

‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்’ என்று மணிமேகலை சொல்றதா நீங்களே பாடம் நடத்தி இருக்கீங்க. அப்போ உணவு உயிருக்கும்ச் சமம் இல்லையா? அந்த உணவுக்கு மரியாதை கொடுக்கணும் இல்லையா?

அதனால்தானே சாமிக்கு பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், தழுகை, எலுமிச்சை சாதம், படைத்து பக்தர்களுக்குத் தர்றாங்க? அன்னதானமும் செய்றாங்க....’ என்று பெரும் சொற்பொழிவுபோல ஆசிரியருக்கு தன் கருத்தை விளக்கினான்.

ஆசிரியருக்கு தனது தவறை எண்ணி நாணம் ஏற்பட்டாலும், அதேவேளையில் தன் மாணவனின் அறிவுக்கூர்மையை எண்ணிப் பெருமையும் ஏற்பட்டது.

“நீ சொல்வது சரிதான் கதிரவா” என்ற ஆசிரியர். காலணியை உடனே கழற்றினார்.

அப்படியே ‘வெரி குட் பாய்’ என்று கதிரவனைப் பாராட்டி தனது இலையில் வைத்த இனிப்பை கதிரவன் இலையில் எடுத்து வைத்து “சாப்பிடு” என்றார் ஆசிரியர்.

இதைக்கண்ட கதிரவனின் அம்மா, மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

நீதி: உன்மையின் உனர்வு மனித இனத்தில் சிரியவர் முதல் பெரியோர்வரை யாரிடத்தில் வேண்டுமானாலும் இருக்களாம். அதனை ஆமோதித்து, கடைபிடிப்பது நமது கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக