வெள்ளி, 5 ஏப்ரல், 2013

பலே கில்லாடி

ஸ்டிவன்சன் ஒரு தச்சுச் தொழிலாளி கடுமையாக உழைப்பாளியும் கூட. தனது ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஊருக்கு தச்சு வேலை செய்யச் செல்வான். வாரத்தின் முதல் நாள் வேலைக்குச் சென்றால் வார இறுதி நாட்களில் தான் வீடு திரும்புவான். ஒவ்வொரு வாரமும் கூலிப் பணத்தை எடுத்துக் கொண்டு திறந்த வெளிப்பகுதியில் நடந்து ஊருக்கு வருவது அவனது வழக்கம்.

அப்படி ஒரு நாள் ஸ்டிவன்சன் தனியே நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு வழிப்பறிக் கொள்ளையன் அவனை துப்பாக்கி முனையில் மறித்தான்.

‘மறியாதையாக உன்னிடமிருக்கும் பணத்தை எடுத்துக் கொடுத்துவிடு. இல்லையென்றால் உன்னைச் சுட்டு கொன்றுவிடுவேன்’ என மிறட்டினான்.

அதைக் கேட்ட தச்சு தொழிலாளி, ‘சரி. பணத்தைத் தந்து விடுகிறேன். ஆனால் பணம் கொள்ளை போய் விட்டது என்று சொன்னால் என் மனைவி  நம்பமாட்டாள். அதனால் எனது தொப்பியை சுட்டு அதில் துவாரத்தை உருவாக்கு. அப்போதுதான் அவளிடம் நம்பிக்கை பெற முடியும்’ என்றான்.

அதற்கு கொள்ளையன் ‘நீ’ சொல்வதும் சரிதான் என்று சொல்லிக் கொண்டே துப்பாக்கியால் தச்சுத் தொழிலாளியின் தொப்பியைச் சுட்டுவிட்டு இப்போது பணத்தைக் கொடுத்து விடு என்றான்.

ஆனாலும் ஸ்டீவன்சன் பணத்தைக் கொடுக்கவில்லை. ‘ஒரு கொள்ளையனிடம் உங்களால் சண்டை போட முடியவில்லையா?... நீங்கள் சரியான கோழை என்று மனைவி மட்டம் தட்டுவாள். அதனால் நான் அணிந்திருக்கும் கோட்டில் நான்கைந்து தடவை சுடு. அப்போதுதான் நான் எதிர்த்து தாக்கினேன் என்பதை அவள் முற்றிலுமாக நம்புவாள்’ என்றான்.

‘நீ சொல்வதும் சரிதான்’ என்ற கொள்ளையன் தச்சு தொழிலாளியின் கோட்டை கழற்றச் சொல்லி அதை பல தடவை சுட்டான். பிறகு இப்போது பணத்தைக் கொடு என்றான்.

தச்சு தொழிலாளியோ, ‘இன்னும் சில ஓட்டைகள் இருந்தால்தான் என் மனைவியின் சந்தேகத்தைப் போக்க முடியும். அதனால் கோட் மீது இன்னும் இரண்டு தடவை சுடு’ என்றான், ஸ்டீவன்சன்.

கொள்ளையனுக்கோ எரிச்சல். ‘என்னிடம் இனி குண்டுகள் எதுவும் இல்லை. அதனால் சுட முடியாது. பணத்தைக் கொடு’ என்றான்.


உடனே தச்சுத் தொழிலாளி தன்னிடமிருந்த சிறிய ரம்பத்தை எடுத்து கொள்ளையனிடம் காண்பித்துவிட்டு ‘இதற்காகத்தான் காத்திருந்தேன். இனி உன்னால் என்னை எதுவும் செய்யமுடியாது. போசாமல் இங்கிருந்து ஓடுவிடு. இல்லையென்றால் உன்னை ஒரு வழி பண்ணிவிடுவேன்’ என்று மிரட்டினான்.

அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அந்தக் கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

கதையின் நீதி: புத்திசாலிகள் எந்த ஆபத்திலிருந்தும் தப்பித்து விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக