வெள்ளி, 5 ஏப்ரல், 2013

பயத்தால் வந்த உன்மை.


25 வயது ஜார்ஜ் கார்டன் மிசிசிபி நகரில் உள்ள ஒரு வங்கியில் காசாளாராக பணியாற்றி வந்தார். தீடீரென்று ஒரு நாள் அவர், தன் வேலை பார்த்த வங்கியிலேயே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதோடு 55 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. உள்ளூர் போலீஸ் எவ்வளவோ முயன்றும் கார்டனை யார் கொலை செய்தார் என்பதையும் பணம் எங்கே போனது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் ஆலன் பிங்கெர்டன் என்னும் தனியார் துப்பறியும் துறை அதிகாரி அந்த வழக்கை சவாலாக ஏற்றுக் கொண்டு குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் இறங்கினார். ஆனால் அவருக்கும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

எனினும் கார்டனுடன் பண்புரிந்த சக ஊழியர் டிரைடேல் என்பவர் மீது பலமான சந்தேகம் இருந்தது. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. டிரைடேல் தானாக ஒப்புக் கொண்டால் மட்டுமே அந்தக் கொலையைச் செய்தவர் அவர்தான் என்பதை நிரூபிக்க முடியும்.

டிரைடேலிடம் ஆலன் துருவித் துருவி விசாரித்தபோது கூட எந்த வித முன்னேற்றமும் இல்லை. விசாராணையின் ஒரு கட்டத்தில் டிரைடேல் சட்டப்படி என்னை எதுவும் செய்ய முடியாது  என்று கத்தினார். இதனால் ஆலனுக்கு சந்தேகம் வலுத்தது.

எப்படியும் டிரைடேலை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நுதான திட்டத்தை தீட்டினார். அதன்படி செயல்படவும் செய்தார்.

ஓரு நாள் இரவு டிரைடேலின் வீட்டிற்கு ஆலன் சென்றபோது தன்னுடன் ஒருவரை அழைத்துச் சென்றார். அவரை வெள்ளை நிற ஆடை அணியும் படிகூறி அழைத்துப்போனார். ஆலனுடன் வந்தவரைப் பார்த்த டிரைடேல் அய்யோ இவன் எப்படி இங்கே வந்தான்?... என்று அலறினார்.

உடனே ஆலன் யார், என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லையே என்று அமைதியாகச் சொன்னார். அந்தப் பொய்க்கு நல்ல பலன் இருந்தது.

அய்யோ... அப்படியென்றால் உங்களுடன் வந்திருப்பது ஆவியா?... அந்த ஆவி என்னை எதுவும் செய்துவிடுவதற்குள் நான் கார்டனை கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறேன் என்று கத்தினார். டிரைடேலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்தார், ஆலன்

சரி, ஆலன் என்ன தந்திரம் செய்தார்?...

இறந்து போன கார்டனைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவரை தனது திட்டத்திற்கு ஆலன் தேர்ந்தெடுத்தார். பின்னர் ஒருநாள்  அவருக்கு வெள்ளையுடை அணியச் செய்து டிரைடேலின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆலனின் திட்டப்படி யாருக்கும் தெரியாமல் திடீரென்று வெள்ளையுடை நபர் அங்கே வரவேண்டும். அப்படிச் செய்தால் டிரைடேல் பயந்து போய் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வான் என்பது துப்பறியும் அதிகாரி ஆலனின் திட்டம். அதில் சரியாக டிரைடேல் மாட்டிக் கொண்டான் என்பதே உண்மையான கதை.

ஆலன் டிரைடேல் நடத்திய நிறுவனத்திற்கு பெயர் நேஷனல் டிடெக்டிவ் ஏஜென்சி என்று பெயர். இந்த நிறுவனத்தின் சுலோகம்: நாங்கள் எப்போதும் உறங்குவதில்லை.

இதன் அடிப்படையில்தான் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் பல திறந்திருக்கும். அடையாளச் சின்னமாக அதற்கு கண்தொடர்பான பெயர்களையும் சூட்டிக் கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக