செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மகிழ்ச்சி


ஓர் ஊரில் வேலு என்பவன் கூலித் தொழில் செய்து கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நிம்மதியாக நடத்திவந்தான். அவனிடம் சொந்தமாக ஒரு மாட்டுவண்டி இருந்தது. ராமு, சோமு அவனது மாட்டு வண்டி காளைகள்.

வேலு தன் மாட்டுவண்டியில் நிறைய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். கிரமாத்திற்க்கு அருகில் உள்ள ரைசில் மில் ஒன்றில் அனைத்து மூட்டைகளையும் இறக்கினார்.

சோமு முகத்தில் சந்தோஷம் கரை பரண்டு ஓடியது. அதை கவனித்த ராமு, ‘என்ன சோமு என்றைக்கும் இல்லாமல் இன்று உன் முகம் சந்தோஷமாக இருக்குதே, என்ன காரணம்?’ என்று கேட்டது.

‘ராமு இன்னும் இரண்டு நாளில் மாட்டுப் பொங்கல் திருவிழா வருகிறது. நமக்கு விதவிதமான விருந்து படைப்பார்கள். நம் கொம்புகளுக்கு எல்லாம் பெயிண்ட் பூசி, மாலை போட்டு நம்மை எல்லோரும் கை கூப்பி கும்பிடுவாங்க. அதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கு’ என்றது சோமு.

‘ஆமாம், ஆமாம்... பொங்கல் வரப் போகுதுல்ல. மாட்டுப்பொங்கல் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று ஆமோதித்தது ராமு.

வேலு, மூட்டைகளை இறக்கிவிட்டு கூலி வாங்கினான். அந்தப் பணத்தில் பிள்ளைகளுக்கு கரும்புக் கட்டும், மஞ்சள்குலையும் வாங்கிக் கொண்டான். பொங்கல் பொருட்களும் பைநிறைய வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். காளைகளும் சந்தோஷமாக புறப்பட்டன.

மறுநாள் வேலு பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டான். மறுநாள் மாட்டுப் பொங்கல் என்பதால் அன்று மாலையே வேலு மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசிக் கொண்டு இருந்தான். சோமுவுக்கு வர்ணம் தீட்டி முடித்த சமயத்தில், விவசாயி கோவிந்தன் அழுது கொண்டே வேலுவைத் தேடி வந்தான். “ஏண்டா கோவிந்தா ஏன் அழுதுகிட்டே வர்றே?” என்றார் வேலு.

“அய்யா என் மனைவிக்கு திடீர்னு பிரசவ வலி வந்திடுச்சி. துடியா துடிக்கிறா? இந்த நேரத்தில் நம்ம ஊர் வழியா பஸ் கிடையாது, என்ன செய்றதுன்னே புரியல. அதான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றான் கோவிந்தன்.

“சரி பதட்டப்படாதம இரு. நான் வண்டியை பூட்டுகிறேன். சீக்கிரம் கிளம்பிடலாம்” என்றான் வேலு.

“சரிங்கய்யா” என்ற கேவிந்தன் வந்த வேகத்தில் திரும்பி ஓடினானா.

வேலு, காளைகளை வண்டியில் பூட்ட தயாரானான். ராமு உடனே கிளம்பியது. ஆனால் சோமுவோ அடம்பிடித்தது கிளம்ப மறுத்தது.

அப்போது ராமு சோமுவிடம், ஏன் வர மறுக்கிறாய்? என்று கேட்டது.

‘விடிந்தால் மாட்டுப் பொங்கல், நம்மை எல்லோரும் கொண்டாடுவாங்க. நாம அங்கே போனால் அதெல்லாம் கிடைக்காது’ என்றது சோமு.

“திமிர் பிடித்தவன், உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்” என்று வேலு கோபத்தில் சோமுவைத் திட்டினான்.

ஒற்றை மாட்டை வண்டியில் பூட்டுவதென்று முடிவு செய்து, ராமுவை மட்டும் வண்டியில் பூட்டி வண்டியை கிளப்பினான். கோவிந்தனையும், மனைவியையும் ஏற்றிக் கொண்டு பக்கத்து ஊர் அரசு ஆஸ்பித்திரிக்கு வண்டி புறப்பட்டது.

ஒற்றைக் காளை பூட்டிய வேலுவின் வண்டி, ‘ஜல் ஜல்’ மணியோசையுடன் குதிரை வண்டிபோல வேகமெடுத்தது. நல்லபடியா கோவிந்தன் மனைவிக்கு சுகப்பிரசவம் நடந்தது. மறுநாள் மாலையில்தான் ராமு வீடு திரும்பியது.

சோமு, ராமுவைப் பார்த்தது, “அடுத்தவனுக்காக உதவப்போன உனக்கு மாலை மரியாதை எதுவும் கிடைக்கலே. அதனால்தான் நான் வரமாட்டேன் என்று சொன்னேன்” எனறு பெருமைப்பட்டது சோமு.

அதற்கு சோமு, “இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதுதான் எனக்கு சந்தோஷம் அதனால் எத்தனை பேரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறேன் தெரியுமா? அது தனிப்பட்ட உன்னுடைய சந்தோஷத்தைவிட பல மடங்கு உயர்ந்தது” என்றது ராமு.

சோமு அவமானத்தில் தலையை குனிந்து கொண்டது.

கதையின் நீதி: தன்னுடைய சந்தோஷத்தைவிட மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே உயர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக