ஞாயிறு, 10 மார்ச், 2013

உள்ளதும் போச்சே!

சேவல் ஒன்றுக்கு வளம் இல்லாத புன்செய் நிலம் இருந்தது. அந்த நிலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு விளைந்தன. அந்த உணவைக் கொண்டு சேவல் வாழ்ந்து வந்தது.

ஒருமுறை தொலைவில் உள்ள நண்பன் வாத்தைப் பார்க்கச் சென்றது. சேவலை நன்கு உபசரித்து அரிசிச் சோறு போட்டது. அரிசிச் சோற்றை இதுவரை சாப்பிடாத சேவல், இது எப்படிக் கிடைக்கிரது என்று நண்பனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டது.

தன் வயலில் விதைப்பதற்காக நெல்லை வாங்கிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டது. தன் வயலில் நெல்லை விதைத்தது சேவல். மழை பெய்யாததாலும் புன்செய் நிலமாக இருந்ததாலும் நெல் விளையவே இல்லை.

எந்த நிலத்தில் எதை விதைக்க வேண்டும் என்று அறியாமல் தவறு செய்துவிட்டேன். ஓரளவு விளையும் கம்பு, சோளத்தையும் இழந்துவிட்டேன் என்று வருந்தியது சேவல்.

பிறகு சேவல் தன் நிலத்தில் பழையபடியே, மானவரி பட்டத்தில் மழை வரும்போது நன்கு உழுது அதற்க்கு தேவையான சிறுதானியங்களை விதைத்து அறுவடைச் செய்து உண்டு வந்தது.

 சிறிது நாட்கள் கழித்து சேவல் தனது நண்பன் வாத்தைப் பார்க்க சிறுதானியங்களை கொஞ்சம் எடுத்துக் கொண்டு புறப்பட்டது. வாத்து அரிசிமாவால் செய்யப்பட்ட சுவையான உணவு வகைகளைச் சாப்பிட்டு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உறங்கி கிடந்தது. இதனை கண்ட சேவல், அதிர்ந்துப்போய் நண்பா என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி உறங்கி கிடங்கின்றாய் என விசாரித்தது.

நண்பா உணவே மருந்து என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை இப்போது தான் உனர்கிறேன். என்னுடைய உணவு பயக்கத்தில் கொஞ்சம் கட்டுபாடு இருந்திருக்கவேண்டும் அதன் விலைவு என்னை நோயாலியாக மாற்றி விட்டது.

வாத்து இவ்வாறு சொன்னதும் கலங்கிபோனது சேவல்! என்ன நண்பா சொல்கிறாய்? உணவு என்பது பசியை நீக்க கடவுள் கொடுத்த பிரசாதம் அதை போய் இவ்வாறு தீங்கு விலைவித்துவிட்டது என்று குற்றம் கூறுகிறாயே என்று கேட்டது.

இல்லை நண்பா உன்னுடைய உணவுகளை உற்பக்தி செய்ய கடவுள் நிரைய கட்டுபாடுகளை விதித்திருக்கிறார்... குறைந்த மழை, மேட்டு நிலம், அதிக வெயில், திட்டமான மகசூல் என பல கட்டுபாடுகளை வைத்து கடவுள் இயற்கையாகவே உன்னை கட்டுப்படுத்துகின்றார். ஆகையால் நீய் ஆரோக்கியமான உனவை அலவோடு சாப்பிட்டு நிம்மதியாய்  இருக்கின்றாய்.   

ஆனால் வாத்து இனத்திற்கு பல்லதாக்கு நிலம், அதிக மழை, திட்டமான வெயில், அதிக மகசூல் என கட்டுபாடுகள் இல்லாமல் வாழவிட்டுவிட்டார். இதன் காரணமாக நாங்கள் அமோகமாக விவசாயம் செய்து ஏழை எளியவர்களுக்கு கொடுக்காமல் நாங்களே சாப்பிட்டோம். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்திருந்தோம் மற்றவர்களை தாழ்வாக என்னினோம், ஆனால் எங்களின் சத்தான உணவின் சுவை எங்களுடைய உயிர்காக்க பயனற்று போய்விட்டது. என முனுமுனுத்தது வாத்து.

அப்படியில்லை நண்பா கடவுள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் ஒரே கண்ணோட்டதில் தான் பார்கின்றார்.
உயர்வான வாழ்கை வாழ்வதாக நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுத்து உதவேண்டும். கர்வம் கொள்ளக்கூடாது மாறாக கருனையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் தாழ்வான வாழ்கை வாழ்வதாக நினைப்பவர்கள் வருத்தம் அடையக்கூடாது மாறாக நம்பிக்கை உடையவர்களா இருக்கவேண்டும். இவ்வாரு இருந்தால் உலகில் ஏற்றதாழ்வு இல்லாமால் எல்லோரும் சந்தேஷமாக வாழளாம் இது இயற்கையின் நீதி ஆகும் என்றி கூறிவிட்டு... சேவல் தான் கொண்டுவந்த சிறுதானியங்களை வாத்திடம் கொடுத்து இதனை சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் என்று ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து தனது வீட்டுக்கு கிளம்பியது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக