திங்கள், 11 மார்ச், 2013

அன்பு வெற்றி செல்வம்.

அன்பு, வெற்றி, செல்வம், என்ற மூவரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் நாள் தோறும் யார் அழைத்தாளும், அவர்களுடைய வீட்டிற்க்குச் சென்று அவர்களை உபசரிப்பது வழக்கம்.

ஒரு நாள் மாலை ஆறு மணி ஆகிவிட்டது. ஊரில் உள்ளவர்கள் எல்லோருடைய வீட்டிலும் குத்துவிலக்கேற்றி பூஜை அரையில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமையத்தில் ஒரு வீட்டில் வயதான பெரியவர் வீட்டுக்கு வெளியில் உள்ள தின்னையில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அன்பு, வெற்றி, செல்வம் என்ற மூன்று நண்பர்களும் அந்தப் பெரியவரைப் பார்த்தவாரு தெருவில் சென்றுக் கொண்டிருந்தனர். பெரியவர் அவர்களை அழைத்தார், அவர்களின் பெயர் மற்றும் அவர்களை பற்றி விசாரித்தார்.
உடனே பூஜை அறையில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த தனது மருமகளுக்கு குரல் கொடுத்தார்... நமது வீட்டிற்க்கு வெற்றி, செல்வம், அன்பு என்ற மூன்று பேர் வந்திருக்கிறார்கள். அவர்களில் யாரை அழைப்பது என்று கேட்டார்.

அதற்க்கு அந்த பெரியவரின் மருமகள், அந்த மூவரையும் நமது வீட்டிற்க்கு அழைத்து வாருங்கள் அப்போது தான், நமது வீடு சந்தோஷமாகவும் செல்வச் செழிப்போடும் இருக்கும் என்றால். 

உடனே அந்தப் பெரியவர். வெளியில் காத்திருந்த அந்த மூவரையும் தனது வீட்டிற்க்கு வந்து தங்களை உபசரிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். அதற்க்கு அந்த மூவர் அளித்த பதில் என்னத் தெரியுமா! எங்களில் யாரையாவது ஒருவரை மட்டும் தான் நீங்கள் அழைக்க வேண்டும் மற்ற இருவர்கள் ஊரில் உள்ள மற்ற வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றனர்.

இந்த செய்தியைக் கேட்டவுடன், உடனே அந்த பெரியவர் தனது மருமகளிடம் விஷயத்தை சொன்னார். அதற்க்கு அந்த மருமகள் அப்படியானல்... நமது வீட்டிற்க்கு செல்வத்தை அழைத்து வந்துவிடுங்கள். அவனைவைத்து நமக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளலாம் என்றால்.

உடனே அந்த பெரியவர் செய்வதறியாமல் தனது வீட்டிற்க்கு செல்வத்தை அழத்துக்கொண்டார். மற்ற இருவர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

வெற்றி, மற்றும் அன்பு ஆகிய இருவர்களில் வெற்றியை ஒரு வீட்டுக்காரர் அழைத்துக்கொண்டார். பிறகு அன்பு தனிமைப்படுத்தப்பட்டான். கடைசியாக ஒரு ஏழை விவசாயி வேறு வழியின்றி அன்பை தனது வீட்டிற்க்கு வந்து தங்களை உபசரிக்கும்மாறுக் கேட்டுக்கொண்டார்.

சிறிது நாள் சென்றது. தனது நண்பன் அன்பு என்றவனைக் காணாமல், பேசாமல் இருந்ததால் துடிதுடித்துப் போய்விட்டார்கள் வெற்றியும், செல்வமும்.

வெற்றியும், செல்வமும் உடனே ஒரு முடிவை எடுத்தார்கள். அவர்கள் குடிக்கொண்ட வீட்டில் உள்ளவர்களை அழைத்து “அன்பு” எங்களது ஆறுயிர் நண்பன் அவனைக் காணாமல் பேசாமல் எங்களால் ஒரு நொடியும் இருக்க முடியாது. ஆகையால் தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு மறு கணமே அங்கிருந்து கலம்பிவிட்டார்கள் அன்பு இருக்கும் இடத்திற்க்கு.

அன்பு இருக்கும் இடத்தில் தான் வெற்றியும் செல்வமும் நிலைத்திருக்கும். மற்ற இடங்களில் ஒருவேலை வெற்றியும், செல்வமும் இருந்தாலும் அது நிலைத்திருக்காது என்பது உண்மை. அவற்றை இந்த கதையின் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அன்பு என்றால்! மன்னிப்பு, சகிப்புதன்மை, கருனை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நன்மை மற்றும் தீமையை கண்டறியும் தெளிவு, பாசம், முரட்டுதனம் இல்லாத காதல். இவையெல்லாம் மனிதக் குலத்திற்க்கே உள்ள கடவுள் கொடுத்த மகத்தான சொத்து.

இத்தகைய சொத்தை பயன்படுத்தி வாழ்கையில் மோகம் இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், கொடூரங்களை செய்யாமலும், வாழ்க்கையின் நியதி அறிந்து நிம்மதியாக வாழலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக